கையில் க்யூட் குழந்தை.. ஆனால் முகம் சுளிக்க வைக்கும் காஸ்ட்யூம்.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ஸ்ரேயா சரண் தனது கையில் மகளை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரது க்யூட் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் ஸ்ரேயா சரண் அணிந்த காஸ்ட்யூம் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் இவர் தற்போது கூட ஒரு இந்தி படம் உள்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சரணுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது மகளுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவரது குழந்தைக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஸ்ரேயா சரணின் காஸ்டியூமுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கையில் குழந்தை வைத்திருக்கும் போது இப்படிப்பட்ட ஆடையை அணிய வேண்டுமா? என்று கமெண்ட் பகுதியில் பதிவாகி வருகிறது. இருப்பினும் இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments