close
Choose your channels

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு

Wednesday, July 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்களின் லாக்கப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் இன்று இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நேரடியாக சாத்தான்குளம் சென்று விசாரணையை தொடங்கினர்

முதல்கட்ட விசாரணை முடிந்தபின்னர் சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை என்றும், எஸ்.ஐ. ரகுகணேஷ் மட்டும் சென்றதாகவும், அவரிடம் விசாரணை செய்தபின்னர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்பட மொத்தம் 6 போலீசார் மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ்.ஐ.ரகுகணேஷ் கைது நடவடிக்கையை அடுத்து மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் அனைவரும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.