close
Choose your channels

கமல்ஹாசன் கருத்துக்கு 14 வருடங்கள் கழித்து பதில் சொன்ன படக்குழு!

Friday, June 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ஒரு கருத்துக்கு தற்போது படக்குழுவினர் பதில் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி உலகம் எங்கும் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த நிலையில் ’விக்ரம்’ திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் சிபிராஜ் நடித்த ’மாயோன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ என்ற படத்தில் ’கடவுள் இல்லனு சொல்லல, இருந்தா நல்ல இருக்கும்ன்னு சொல்கிறேன்’ என்று வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாகி உள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ’மாயோன்’ படம் மூலம் பதில் கூறி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: ‘தசாவதாரம்’ படத்தில் ’கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று கமல் வசனம் பேசிய நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு ’மாயோன்’ படத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ’மாயோன்’ திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment