உதட்டு முத்தக் காட்சியில் சிபிராஜ் நடிக்க மறுத்தது ஏன்? இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜ் நடித்து வரும் 'சத்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் அனுமதி பெற்று 'சத்யா' டைட்டிலை பெற்ற படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும், போலீஸ் அதிகாரி கேரக்டரில் வரலட்சுமியும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் கதைப்படி ஒரு முக்கிய காட்சியில் சிபிராஜ் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காட்சி குறித்து இயக்குனர் பிரதீப், சிபிராஜிடம் விளக்கியபோது அவர் இந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். கதைப்படி இந்த காட்சி முக்கியம் என்று இயக்குனர் எவ்வளவோ எடுத்து கூறியும் பிடிவாதமாக சிபிராஜ் நடிக்க மறுத்துவிட்டதாக இயக்குனர் பிரதீப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த உதட்டு முதக் காட்சியில் அவர் நடிக்க மறுத்ததற்கான காரணம் சிபிராஜ் மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால் தான் என்பது தெரியவந்துள்ளது.

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதையாம். விறுவிறுப்புடன் த்ரில் காட்சிகளுடன் இந்த படம் உருவாகியிருப்பதாகவும் நிச்சயம் இதுவொரு கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் இயக்குனர் பிரதீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஆனந்த்ராஜ், ரவிவர்மா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு '555' பட புகழ் சைமன் இசையமைத்து வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

More News

பிரபல ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்றாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் புகழின் உச்சத்தை அடைவார்கள் என்பது உறுதி. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களில் ஒருவரான ரோ

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு, பாடதிட்டம் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த இரண்டு வகுப்புகளிலும் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களைக் கணக்கிட்டு, சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.

சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு கைது வாரண்ட்

கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செய்தி ஒன்று பிரபல பத்திரிகையில் வெளியானது.

நடிகை ஸ்ரீதேவியின் 50 வருடங்களும், 300வது படமும்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது.

உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு புது வழி காட்டும் சங்கமித்ரா

பிரபல இயக்குனர் ராம்நாராயணன் அவர்கள் 100 படங்கள் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனர். தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பட படங்கள் தயாரித்து கோலிவுட் திரையுலகில் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அவரது கொள்கை குறைந்த பட்ஜெட்டில் பெரிய ஸ்டார் இல்லாமல் மினிமம் கியாரண்டி படம் கொடுக்க வேண்டும் என்பதே. அவர