close
Choose your channels

தேசிங்கு பெரியசாமி படத்திற்காக லண்டன் செல்லும் சிம்பு.. காரணம் இதுதான்..!

Thursday, May 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதுவரை இல்லாத அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு இதுவரை நடிக்காத வித்தியாசமான போர் வீரன் கேரக்டரில் நடிப்பதாகவும் அதற்காக அவர் சில பயிற்சிகளை மேற்கொள்ள லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் லண்டனில் தங்கி இருந்து சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கு முன்பே இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தேசிங்கு பெரிய சாமியின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.