'ஈஸ்வரன்' படத்தின் அடுத்தகட்ட பணியையும் முடித்த சிம்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிய நிலையில் சிம்பு தனது பகுதியின் டப்பிங் பணியை ஆரம்பித்தார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிம்பு தனது பகுதியின் டப்பிங் பணியை முழுமையாக முடித்து விட்டார் என்றும் இதனை அடுத்தே நாயகி நிதி அகர்வால் உள்பட மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

'ஈஸ்வரன்’ படத்தின் டீசரை தீபாவளி அன்றும், படத்தை பொங்கல் அன்றும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தகட்டமாக இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் எஸ்.தமன் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

More News

பாலாஜிக்கு ரெட் கார்டா? இல்லையா? இரண்டாவது புரமோவில் தெரிந்த விடை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார்? என்பது குறித்த காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது. ஏற்கனவே அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி,

தீர்ந்தது குழப்பம்: எவிக்ட் ஆனது இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக நேற்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்த நிலையில்,

பாலாஜிக்கு ரெட் கார்ட்: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ள நிலையில் நேற்று வரை வெளிவந்த செய்தியின்படி சுரேஷ் தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாகவும்

கமல்ஹாசன் குறித்து கால்குலேஷன் செய்த அனிருத்-லோகேஷ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் மற்றும் கமல்ஹாசன் மட்டுமின்றி ஏகப்பட்ட விருந்தினர்கள் திடீரென வருகை தந்து பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்

நீதிபதி யார் சார்? கமல் முன் சுசியை கலாய்த்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் என்ற டாஸ்க் நடைபெற்றது. அதில்  நீதிபதி என்ற பதவியை கோமாளித்தனமாக பயன்படுத்திய சுசித்ராவுக்கு