மீண்டும் இணைந்த சிம்பு-அனிருத்

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியில் ஈடுபட்டிருந்த சிம்பு, தற்போது ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 'ரம்' படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடிய நிலையில் தற்போது சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு இசையமைக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சக்க போடு போடு ராஜா' படத்தில் சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோசங்கர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். சேதுராமன் இயக்கவுள்ள இந்த படத்தை விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்கின்றனர்.

More News

நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

ரஜினி-ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது...

முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தின் மூலம் சொற்போர் நடந்து வருவதை அனைவரும் கவனித்து கொண்டுதான் வருகின்றனர்...

ஜோதிகா கேரக்டரை ஏற்கும் அருள்நிதி

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள அடுத்த படமான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்

வெளிமாநிலங்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.