சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 100 கிலோவுக்கு மேல் உடல் எடை இருந்ததால் அவரது படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்ததும், இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் கூட வரவில்லை என்ற அதிருப்தி அவரது ரசிகர்களிடம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்த கொரோனா விடுமுறையில் கேரளா சென்று உடல் எடையை 70 கிலோவாக குறைத்து சிம்பு தற்போது ஸ்லிம்மாக தோற்றமளிப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து அவர் சுசீந்திரன் இயக்கும் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து அந்த படத்தை ஒருசில நாட்களில் முடித்து கொடுத்ததோடு, டப்பிங் பணியையும் முடித்து விட்டார் என்பதும், சிம்பு அந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பது ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி ஆகும்

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சிம்பு நடித்து வந்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுவையில் இன்று ’மாநாடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாகவும், இந்த படப்பிடிப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மிக விரைவில் ’மாநாடு’ திரைப்படத்தையும் சிம்பு நடித்து முடித்து விடுவார் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே ஹன்சிகாவுடன் சிம்பு நடித்த ‘மஹா’ என்ற திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் சிம்பு மீண்டும் தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அமெரிக்காவின் முதல் Powerpuff Girl… துணை அதிபரை வாழ்த்தி மகிழும் கார்ட்டூன நெட்வொர்க்!!!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வார நாமினேஷனில் இத்தனை பேரா? வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த வாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டவர்கள் நாமினேஷன் சிக்குவார்கள் என்பதும் தெரிந்ததே 

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது: பெரும் பரபரப்பு 

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இதே வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும்

துப்பாக்கியை வைத்து செல்பி: தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளைஞர்!

கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்களிடம் செல்பி மோகம் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதும் அபாயகரமான இடங்களில் செல்பி எடுத்து விலைமதிப்பில்லா உயிர்களை பல இளைஞர்கள் இழந்துள்ளனர்

விஜய் விஷயத்தில் நான் செய்த தவறு: மனம் திறக்கும் எஸ்.ஏ.சி

தளபதி விஜய் மற்றும் அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்குமான அரசியல் பிரச்சினை குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது