close
Choose your channels

இந்த வார நாமினேஷனில் இத்தனை பேரா? வெளியேறுவது யார்?

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த வாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டவர்கள் நாமினேஷன் சிக்குவார்கள் என்பதும் தெரிந்ததே

அந்தவகையில் நேற்று சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று நாமினேஷன் சிக்கியவர்கள் குறித்த தகவல் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது. இந்த வார நாமினேஷனில் கேப்ரில்லா, சம்யுக்தா, சுசித்ரா, அனிதா, ஷிவானி, அர்ச்சனா, பாலாஜி, ரம்யா, ஆஜித், ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளனர்

கேப்ரில்லா தனது பெயரை பிக்பாஸ் கூறியபோது ஆச்சரியப்பட்டதும், ரம்யா தனது பெயர் அறிவிக்கப்பட்டபோது, ‘நானும் வந்துட்டேன்’ என்று கூறி அவருடைய டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்ததும் முதல் புரமோவின் சுவாரஸ்யமான காட்சிகள் ஆகும்.

பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 15 பேர்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களில் இந்த வார நாமினேஷன் 9 பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை அளிக்கின்றது. கடந்த வாரம் சர்ச்சைக்குரியவராக கருதப்பட்ட சனம்ஷெட்டி நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளதும் ஆச்சரியம் தான். நிஷா, சோம், ரியோ, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேஷனில் இல்லை என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை

இதனையடுத்து இந்த வார நாமினேஷனில் சிக்கிய ஒன்பது பேர்களில் வெளியேறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.