யாரும் முன்வரவில்லை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை தைரியமாக வாங்கிய சிம்பு பட நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,August 29 2023]

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இருந்த மும்பை வீட்டை சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென மர்மமான முறையில் தற்கொலை செய்து இறந்து விட்டார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு பின் அவரது வீட்டில் யாரும் வாடகைக்கு கூட குடி வரவில்லை என்றும் வீட்டை விலைக்கு வாங்கவும் யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வீட்டை தற்போது நடிகை அடா ஷர்மா வாங்கி உள்ளதாக தெரிகிறது. நடிகை அடா ஷர்மா , சிம்பு நடித்த ’இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பதும் அது மட்டும் இன்றி ’சார்லி சாப்ளின் 2’ ’தி கேரளா ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் வீட்டை வாங்குவது குறித்து அடா ஷர்மா கூறிய போது ’தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இறுதி செய்யப்பட்டதும் அதை முறைப்படி மீடியாவிடம் தெரிவிப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

More News

'தலைவர் 170' படத்தில் இணையும் 'பாகுபலி', 'சார்பாட்டா பரம்பரை' நட்சத்திரங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இன்னிக்கு ராத்திரி மிஸ் ஆகிடக்கூடாது, அவன் சாகணும்.. சமுத்திரக்கனியின் 'யாவரும் வல்லவரே' டீசர்..!

சமுத்திரகனி, யோகி பாபு நடித்த 'யாவரும் வல்லவரே' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில்

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் இணைகிறாரா நாகார்ஜுனா? நாளை அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் 'தனி ஒருவன் 2': படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்..!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'தனி ஒருவன் 2' உருவாக உள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர்

ரஜினியை சுதந்திரமா வாழ விடுங்க.. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து சீமான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது குறித்து சீமான் தனது