close
Choose your channels

யாரும் முன்வரவில்லை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை தைரியமாக வாங்கிய சிம்பு பட நடிகை..!

Tuesday, August 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இருந்த மும்பை வீட்டை சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென மர்மமான முறையில் தற்கொலை செய்து இறந்து விட்டார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு பின் அவரது வீட்டில் யாரும் வாடகைக்கு கூட குடி வரவில்லை என்றும் வீட்டை விலைக்கு வாங்கவும் யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வீட்டை தற்போது நடிகை அடா ஷர்மா வாங்கி உள்ளதாக தெரிகிறது. நடிகை அடா ஷர்மா , சிம்பு நடித்த ’இது நம்ம ஆளு’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பதும் அது மட்டும் இன்றி ’சார்லி சாப்ளின் 2’ ’தி கேரளா ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் வீட்டை வாங்குவது குறித்து அடா ஷர்மா கூறிய போது ’தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இறுதி செய்யப்பட்டதும் அதை முறைப்படி மீடியாவிடம் தெரிவிப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.