சென்னை ஜல்லிக்கட்டை அடுத்து மும்பைக்கு செல்லும் சிம்பு

  • IndiaGlitz, [Tuesday,January 24 2017]

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது பெரும் பங்கை அளித்த நடிகர் சிம்பு, தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து மும்பைக்கு செல்லவுள்ளார். ஆம் அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக அவர் வெகுவிரைவில் படக்குழுவினர்களுடன் மும்பை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் சிம்பு, அஸ்வின் தாதா கேரக்டரின் அறிமுகப்பாடலின் படப்பிடிப்பிற்காக மும்பை செல்லவுள்ளார். மேலும் இந்த பாடலை அவரே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் வாழ்க்கை தத்துவங்கள் குறித்து இருக்குமாம்.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் இந்த படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எத்ரிபார்க்கப்படுகிறது.

More News

'விஜய் 61' படத்தில் பிரபல காமெடி நடிகர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. கலவையான விமர்சனம், ஜல்லிக்கட்டு போராட்ட பிரச்சனைகளையும் தாண்டி இந்த படம் திருப்திகரமான வசூலை தந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

சூர்யாவின் 'சி 3' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது...

உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா? பீட்டா ராதாராஜனை வெளுத்து வாங்கிய டிடி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர்...

அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. நடிகர் சிவகுமார்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக இயற்றப்பட்டுவிட்டதால் மாணவர்களின் இத்தனை நாள் அறவழி போராட்டம் முழுவெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஜல்லிகட்டு ஆர்வலர்கள், திரையுலகினர், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட ī

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது...