close
Choose your channels

சென்னை ஜல்லிக்கட்டை அடுத்து மும்பைக்கு செல்லும் சிம்பு

Tuesday, January 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது பெரும் பங்கை அளித்த நடிகர் சிம்பு, தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து மும்பைக்கு செல்லவுள்ளார். ஆம் அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பாடல் படப்பிடிப்பிற்காக அவர் வெகுவிரைவில் படக்குழுவினர்களுடன் மும்பை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வரும் சிம்பு, அஸ்வின் தாதா கேரக்டரின் அறிமுகப்பாடலின் படப்பிடிப்பிற்காக மும்பை செல்லவுள்ளார். மேலும் இந்த பாடலை அவரே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் வாழ்க்கை தத்துவங்கள் குறித்து இருக்குமாம்.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் இந்த படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எத்ரிபார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.