கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யானையின் மரணத்திற்கு காரணமான அந்த கிராமத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலித்து வருகிறது

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே தனது கடுமையான கண்டனத்தை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது நடிகை சிம்ரனும் தனது சமூக வலைப்பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சிம்ரன் இதுகுறித்து, ‘உண்மையில் இந்த செய்தியை படித்தவுடன் எனது நெஞ்சமே நொறுங்கி விட்டது என்றும் இதனை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் விலங்குகள் மீதான வன்முறை என்பது மிகவும் கொடுமையானது என்றும் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

More News

மிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

பிரபல இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த 'துப்பறிவாளன் 2' என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அவருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'துப்பறிவாளன் 2'

கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி பட நாயகி?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல் முதலாக தங்கம் பெற்று தந்தவருமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மணமக்கள் தங்களுடைய திருமணத்தை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

முகத்தில் துப்பிய 'பிகில்' நடிகைக்கு பதிலடி கொடுத்த காமெடி நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்கள் கூட மிகப் பெரிய

இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை – ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி காட்டம்!!!

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி “இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், கடந்த 400 ஆண்டுகளாக இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை” என்று காட்டமாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.