கொரோனா பாதித்தவர்களுக்கு ரகசியமாக உதவி செய்யும் பிரபல பாடகி

கொரோனா பாதித்த தனது ரசிகர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகி ஆரியானா க்ராண்டே ரகசியமாக நிதியுதவி அளித்து வரும் செய்தி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் உரையாடும் பாடகி ஆரியானா க்ராண்டே அவர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு செயலி மூலம் பணம் அனுப்பி உதவி செய்து வருகிறார். இந்த உதவியை அவர் யாரிடமும் சொல்லி விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரை 10 ரசிகர்களுக்கு 500 அமெரிக்க டாலரிலிருந்து 1500 அமெரிக்க டாலர்கள் வரை ஆரியானா அனுப்பியுள்ளதாகவும், அத்தியாவசியத் தேவை யாருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆரியானா உதவி செய்து வருவதாகவும், இந்த உதவியை பெற்ற ஒருசிலரிடம் இருந்து தகவல் தெரிந்து கொண்ட அமெரிக்க பத்திரிகை ஒன்று இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

எல்லா ரசிகர்களுக்கும் உதவ முடியாது என்றாலும் அவர்களுடைய சமூக வலைத்தள உரையாடல்களை வைத்து யாருக்கு அவசர தேவையோ அவர்களுக்கு உதவி செய்து வரும் பாடகி ஆரியானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

கொரோனா போல சீனாவில் தொடங்கி ஐரோப்பாவை கலங்கடித்த ஒரு நோயை பற்றி தெரியுமா..?!

பிளேக். தொற்று நோய் என்றாலே பிளேக் என்று பெயர் வைக்கும் அளவிற்கு கொடூரமாக மக்களை கொன்று குவித்த ஒரு தொற்று நோய்.

பாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் 'உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும்

வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா???

செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்களிடம் இருந்து கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால் சீனாவில் பலர் தங்களது செல்லப் பிராணிகளைத் கைவிட்டு விடுகின்றனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி: இம்முறை சிக்கியது திருச்சி

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும்: டாக்டர் கமலா செல்வராஜ் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வெறும் டெம்ப்ரேச்சர் மட்டும் செக் செய்துவிட்டு இந்தியர்கள் என்ற எண்ணத்தில் உள்ளெ விட்டுவிட்டோம், இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும்,