close
Choose your channels

குழந்தையின் புகைப்படத்தை பதிவிட சொன்ன ரசிகர்.. வைரமுத்துவை காரணம் காட்டி மறுத்த சின்மயி..!

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடகி சின்மயிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் ரசிகர் ஒருவர் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறிய போது வைரமுத்துவை காரணம் காட்டி பதிவு செய்ய மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி நடிகர் ராகுல் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

சின்மயி கர்ப்பமாக இருந்த போது எந்தவித போட்டோஷூட்டையும் எடுக்கவில்லை என்பது மட்டுமின்றி கர்ப்பமான தகவலையே அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கவில்லை. குழந்தை பிறந்தவுடன் தான் இரட்டை குழந்தை பிறந்தது என்று குழந்தையின் கையை மட்டும் புகைப்படம் எடுத்து பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ’உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யுங்கள்’ என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அப்போது அவர் ’இந்த கட்டத்தில் எனக்கு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட ஆர்வமாக இல்லை, எனக்கு வெறுப்பு தான் அதிகமாக உள்ளது, என் குழந்தைகளையும் அதற்கு உட்படுத்த நான் விரும்பவில்லை.

வைரமுத்துவின் ரசிகர்கள் ஏற்கனவே ’வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறது’ என்று வெறுப்பான சொற்களை கூறினர். குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்தால் ’ஏன் எனது குழந்தை வைரமுத்துவை போல் இல்லை’ என்று கேட்டாலும் கேட்பார்கள், அந்த அளவிற்கு தமிழ் கலாச்சாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே பாடகி சின்மயி குழந்தை பிறந்தது என்ற தகவலை தெரிவித்த போது ’வாழ்த்துக்கள் வைரமுத்து சார்’ என்று சிலர் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்திருந்தனர். அதற்கு சின்மயி, ‘நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். பொறுக்கித்தனம் அவர்களின் ரத்தத்தில் ஊறியது, வளர்ப்பும் அப்படி' என்று கோபமாக பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.