படுக்கையை பகிர்ந்தால் தான் பாட வாய்ப்பு: இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

பாட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று முன்னணி இயக்குனர் ஒருவர் நிர்ப்பந்தம் செய்ததாக பிரபல பாடகி ஒருவர் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி ஆச்சார்யா. இவர் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறி அழைத்துள்ளார். பின்னர் தன்னுடைய படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவதாக நிர்ப்பந்தம் செய்ததாகவும், ஆனால் தான் இதற்கு மறுத்துவிட்டதாகவும், அதனையும் மீறி தன்னிடம் தவறாக நடக்க அந்த இயக்குனர் முயற்சித்தபோது 'கிட்டே நெருங்கினால் செருப்பால் அடிப்பேன்' என்று கூறியதும் அந்த் இயக்குனர் விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டின் பரபரப்பே இன்னும் நீடித்துவரும் நிலையில் தற்போது பாடகி ஒருவரும் அதே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

விஷாலை மட்டும் தேர்தலில் எதிர்ப்போம்: பிரபல தயாரிப்பாளர்-நடிகர்!

நடிகர் சங்க தேர்தல் விரைவில் வரவுள்ளதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்றும், இப்போதுள்ள நிர்வாகிகளே அந்தந்த பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார்கள்

இந்து தீவிரவாதம் பேச்சு: முன் ஜாமீன் மனுதாக்கல் செய்த கமல்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று அவர் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு,

கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை 

தொடர்ச்சியாக இந்து விரோத பேச்சை கடைபிடித்து வரும் கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்முறையாக சேரன் படத்திற்கு கிடைத்த சான்றிதழ்?

இயக்குனர் சேரன் தான் இயக்கிய முதல் படமான 'பாரதி கண்ணம்மா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'திருமணம்' வரை அனைத்து படங்களும் சென்சாரில் 'யூ' சான்றிதழை பெற்றுள்ளதாகவும்,