சில நாட்களுக்கு முன் பிறந்த மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்: வைரல் புகைப்படம்

தமிழ் உள்பட பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடிய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஸ்ரேயா கோஷல் தனது குழந்தையை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கோஷல் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார். அவருக்கு மே 22ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் கடவுள் அருளால் விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இது போன்ற மகிழ்ச்சியான தருணத்தை தான் எதிர்கொண்டது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது மகன் மற்றும் கணவர் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள ஸ்ரேயா கோஷல், தேவ்யான் முகோபாத்யாவை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், கடந்த 22ஆம் தேதி எங்கள் குடும்பத்திற்கு வந்த அவர் எங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றி விட்டார் என்றும் கூறியுள்ளார். அவர் பிறந்தவுடன் பார்த்த முதல் பார்வையிலேயே அவர் எங்களது இதயங்களை அன்பால் நிரப்பினார் என்றும் ஒரு தாய் மற்றும் தந்தையால் மட்டுமே தங்கள் குழந்தையை உணர முடியும் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் தூய்மையான அன்பு தனக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய வரம் என்றும் இதை ஒரு கனவு போல் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

இசைஞானி ரீவைண்ட்.....! ராஜாவுக்கு ராஜா வாழ்த்து மழை..!

தனது ஆருயிர் தோழர் இசைஞானி இளையராஜாவிற்கு, இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்

நடிகர் கிங்காங் மகனா இவர்? வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் கிங்காங் என்பதும் பாண்டியராஜன் இயக்கிய 'நெத்தியடி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பின் 'அதிசயபிறவி', 'கிழக்கு கரை' 'சின்ன ஜமீன்',

இசைஞானிக்கு பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்த சின்னக்குயில் சித்ரா 

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கில் கொடூரம்....! பொள்ளாச்சியில் மற்றுமொரு சம்பவம்....!

பொள்ளாச்சியில் தந்தையே மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் -நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக காலமாகி வரும் நிலையில் இன்று தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிஆர் என்று கூறப்படும் ஜி ராமச்சந்திரன் காலமானார்.