close
Choose your channels

என்னை கொல்ல வர்றாங்க, காப்பாத்துங்க: குவாரண்டனில் அலறினாரா சுசித்ரா?

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரமாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை ரேகா மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் எவிக்சனின் சிக்கிய ஆஜித், தன்னிடமிருந்த எவிக்சன் பாஸை பயன்படுத்தியதால் அவர் தப்பித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்து பிக்பாஸ் வீட்டில் நாட்டாமைத்தனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் பாடகி சுசித்ரா விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகவும் அதற்காக அவர் தற்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்து பாடகி சுசித்ரா வெளியே ஓடி வந்ததாகவும் யாரோ என்னை கொல்ல வருகிறார்கள், என்னை காப்பாற்றுங்கள் என்று ரிசப்ஷனில் அலறியதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக இதுகுறித்து சேனல் நிர்வாகத்திற்கு ஹோட்டல் நிர்வாகிகள் தகவல் அளிக்க அவர்கள் விரைந்து வந்து சுசித்ராவை சமாதானம் செய்தனர். அதன் பின் நள்ளிரவுக்குப் பின்னர் சுசித்ரா மீண்டும் தனது அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அறையில் சுசித்ரா திடீரென அலறி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment