மீனா கைக்கு வந்தது வீட்டுப்பத்திரம்.. விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் மிகக் குறைந்த நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் விஜயா வீட்டு பத்திரத்தை அடகு வைத்தது அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் அவரை கூண்டில் வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.
அப்போது ரோகினி, பணத்தை கொடுத்து பத்திரத்தை மீட்டு தருவார் என்று விஜயா கெத்தாக கூறுகிறார். இதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் அடுத்த வார புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் வீட்டு பத்திரத்தை பணத்தை கொடுத்து அனைவரும் மீட்டு வருகின்றனர். மீனாவிடம் கொடுத்து இந்த பத்திரத்தை பத்திரமாக நீ தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர். சுந்தர்ராஜன் கூறுகிறார், மேலும் இனி விஜயாவை நம்ப மாட்டேன் என்று கூறுகிறார்.
மீனா அந்த வீட்டு பத்திரத்தை பீரோவில் வைக்கும் போது விஜயா அங்கு வந்து அவரை மிரட்டும் வகையில் பேசுகிறார். இதற்கு நீ நன்றாக அனுபவிப்பாய் என்றும் மிரட்டுகிறார். இத்துடன் இந்த புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
அடுத்த வார எபிசோடுகளில் வீட்டு பத்திரத்தை எப்படி மீட்டார்கள்? மீனா அந்த வீட்டு பத்திரத்தை பத்திரமாக வைத்துக் கொள்வாரா? அல்லது அதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments