'வேதாளம்' ரிலீஸுக்கு பின்பும் தொடரும் வியாழக்கிழமை செண்டிமெண்ட்

  • IndiaGlitz, [Friday,November 13 2015]

அஜீத் நடித்து கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'வேதாளம்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தீவிர சாய்பாபா பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. 'வேதாளம்' படத்தின் பூஜை முதல் டீசர் வரை அனைத்தையும் அவர் வியாழக்கிழமைதான் நடத்தினார். இந்நிலையில் நேற்றைய வியாழக்கிழமை தினத்தில் அவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார்.

ஏ.எம்.ரத்னம் அவர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'வேதாளம்' படத்தின் ரிலீஸுக்கு பின்பும் தயாரிப்பாளரின் வியாழக்கிழமை செண்ட்மெண்ட் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பவர், இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் படம் முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஒரே நேரத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா

ஜீவா நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'யான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாக தவறிய போதிலும், தற்போது அவர் நடித்து வரும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது....

புற்று நோய் குறித்து புற்று நோயில் இருந்து மீண்ட பிரபல நடிகை கூறிய கருத்து

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மனீஷா கொய்ராலா அதன் பின்னர் இந்தியன், முதல்வன், ஆளவந்தான்....

அஜீத்துக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் அனைத்து நகரங்களிலும் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், தனது சொந்த நிறுவனமான எடாகி எண்டர்டெயின்மெண்ட்....

'விஜய் 60' இயக்குனர் ரேஸில் முந்தும் இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்....