close
Choose your channels

'வேதாளம்' ரிலீஸுக்கு பின்பும் தொடரும் வியாழக்கிழமை செண்டிமெண்ட்

Friday, November 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'வேதாளம்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தீவிர சாய்பாபா பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. 'வேதாளம்' படத்தின் பூஜை முதல் டீசர் வரை அனைத்தையும் அவர் வியாழக்கிழமைதான் நடத்தினார். இந்நிலையில் நேற்றைய வியாழக்கிழமை தினத்தில் அவர் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார்.

ஏ.எம்.ரத்னம் அவர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'வேதாளம்' படத்தின் ரிலீஸுக்கு பின்பும் தயாரிப்பாளரின் வியாழக்கிழமை செண்ட்மெண்ட் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பவர், இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் படம் முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.