close
Choose your channels

தாயுடன் தகாத உறவு: சரமாரியாக குத்தி கொலை செய்த மகன்!

Thursday, April 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாயுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரை அவருடைய மகன் சரிமாரியாக குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தாயாரும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் என்பவரும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் இனிமேல் தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று தமிழ்ச்செல்வனையும் அருண்குமார் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தனது தாயுடன் கள்ளக்காதலில் தமிழ்ச்செல்வன் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் ஆத்திரமடைந்த அருண்குமார், நேற்று தமிழ்ச்செல்வன் பணிபுரிந்து கொண்டிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். மேலும் கொலை செய்தவுடன் தப்பிக்க முயற்சி செய்யாமல் அதே இடத்தில் உட்கார்ந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து அருண்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.