close
Choose your channels

சென்னை வெள்ளம்.. சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து உதயநிதியின் பதிவு,..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சென்னை படிப்படியாக மீண்டு வந்தாலும் இன்னும் சில இடங்களில் பொதுமக்கள் அவதியில் தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி தொழில் அதிபர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை நிவாரண நிதியாக தமிழக அரசு அளித்து வருகின்றனர்.

இந்த இலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசின் நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment