சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் இந்த இரண்டு படங்களில் எது முதலில் தொடங்கும் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை

இந்த நிலையில் இயக்குனர் ரவிகுமார் நாளை தனது அடுத்த படம் குறித்த முக்கிய தகவலை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அனேகமாக அது சிவகார்த்திகேயனுடன் அவர் இணையும் படம் குறித்த அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரவிகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

'இன்று நேற்று நாளை' வெளியாகி இன்றோடு மூன்றாண்டு நிறைவுற்றது! கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நிலப்பரப்பு தாங்கிவரும் அதிர்வுகளுக்கு காலப்பயணமே சாலச்சிறந்தது என்று தோன்றுகிறது! நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை. நிச்சயம் நாளையை நமதாக்குவோம்! எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்' என்று கூறியுள்ளார். நாளை அனேகமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

வெளில போகட்டும்: மமதியை கார்னர் செய்த மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு புரமோ வீடியோவும் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் எடிட் செய்யப்படுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது

பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: கார்த்தியை பெருமையாக கூறிய சூர்யா

கோலிவுட் திரையுலகில் அண்ணன் தம்பியான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்கு முன் எத்தனையோ சகோதரர்கள் நடிகர்களாக இருந்தாலும்

மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி: கமலுக்கு பதிலளித்த ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் அதிமுக அமைச்சர்கள் அவரை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.

இந்தியாவுக்கு இதைவிட தலைகுனிவு வேறு எதுவும் வேண்டுமா? அதிர்ச்சி தகவல்

ஒரு காலத்தில் இந்தியா என்றாலே பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் நாடு என்றும், பெண்களை தெய்வம் போல் பாதுகாக்கும் நாடு என்றும் பெயர் இருந்தது.