close
Choose your channels

மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி: கமலுக்கு பதிலளித்த ஜெயகுமார்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் அதிமுக அமைச்சர்கள் அவரை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. குறிப்பாக மீன்வளத்துறை அமைச்சருக்கும் கமல்ஹாசனுக்கும் அடிக்கடி சொற்போர் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது கட்சியின் அதிகாரபூர்வ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தமது கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.

இதுகுறித்து இன்று கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் அங்கு இடம் கிடையாது. அப்படிதான் இங்கும்’ என்று கூறினார். அதாவது தேர்தல் அரசியலில் அ.தி.மு.க , தி.மு.க இடையேதான் போட்டி என்றும் இங்கு வேறு எந்தக் கட்சிகளுக்கும் இடமில்லை என்றும் அவர் மறைமுகமாக கமலுக்கு பதிலளித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கு கமல் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.