விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர்முருகதாஸை அடுத்து இவர்தான்..!

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

தளபதி விஜய் விரைவில் திரை உலகை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி வந்தவுடன் அடுத்த தளபதி யார் என்ற போட்டி திரையுலகில் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து விஜய் படத்தை இயக்கிய இயக்குனர்களையே குறிவைத்து உள்ளதை அடுத்து அது உண்மையோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ’கத்தி’ ’சர்கார்’ போன்ற படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மேலும் ஒரு விஜய் பட இயக்குனர் தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அந்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

More News

'ஈரம்' இயக்குனரின் அடுத்த படம்.. அதே திகில்.. அதே சஸ்பென்ஸ்.. 'சப்தம்' டீசர்..!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ள அடுத்த திரைப்படமான 'சப்தம்' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

வீட்டு சாப்பாடுக்காக ஏங்குனேன்🥲அப்போ இவங்க என்கூட இல்ல...உடைந்து போய் பேசிய உமா ரியாஸ்கான்

நான் எல்லாவற்றையும் சந்தோஷமாக என் கணவருக்காக செய்தேன்,ஏனென்றால் அதில் இருப்பது எங்களுடைய காதல்........

33 வருடங்கள் போனதே தெரியவில்லை.. அது ஒரு மேஜிக்.. பிரபு குறித்து குஷ்புவின் பதிவு..!

இளைய திலகம் பிரபுவுடன் குஷ்பு நடித்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் 'கோட்' அடுத்த அப்டேட்.. ஐஸ்வர்யா கல்பாத்தி பகிர்ந்த அசத்தல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் திரைக்கு வரும் நாகேஷ் பேரன்.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ், மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.