close
Choose your channels

விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர்முருகதாஸை அடுத்து இவர்தான்..!

Friday, April 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் விரைவில் திரை உலகை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி வந்தவுடன் அடுத்த தளபதி யார் என்ற போட்டி திரையுலகில் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து விஜய் படத்தை இயக்கிய இயக்குனர்களையே குறிவைத்து உள்ளதை அடுத்து அது உண்மையோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ’கத்தி’ ’சர்கார்’ போன்ற படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மேலும் ஒரு விஜய் பட இயக்குனர் தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது தற்போது விஜய் நடித்து வரும் ’கோட்’படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அந்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment