சூர்யா-கார்த்தியின் செல்ல சண்டைகள்: பிருந்தாவின் பிரத்யேக பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி குறித்து அவர்களது சகோதரி பிருந்தா சிவகுமார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். குறிப்பாக கார்த்தி மற்றும் சூர்யாவின் செல்ல சண்டைகள் குறித்து அவர் தெரிவித்தது சுவராசியமாக உள்ளது
சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தன்னிடம் செல்ல சண்டைகள் செய்வார்கள் என்றும் குறிப்பாக கார்த்தி கொஞ்சம் கமுக்கமாக குறும்பு செய்வார் என்றும் ஆனால் மாட்டிக் கொள்வதெல்லாம் சூர்யா தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இரண்டு அண்ணன்களுடன் தான் அதிகமாக செல்ல சண்டைகள் செய்துள்ளதாகவும் அதனால் தனது கைகளில் நிறைய வீரத்தழும்புகள் இருப்பதாகவும் அதிகமுறை தையல் போட்டது நானாகத்தான் இருக்கும் என்றும் அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் யார் அதிகமாக செல்ல சண்டைகள் போட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பிருந்தா சிவக்குமார் ஒரு பாடகி என்பதும் சமீபத்தில் வெளியான ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் ’வா செல்லம்’ என்ற பாடலை அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments