அமிதாப்பின் அடுத்த படத்தில் இணையும் 'மெர்சல்' டீம்

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை 'கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 30ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்திற்காக அமிதாப்பச்சன் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்பதும், 'மெர்சல்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணையவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

பொது ரசிகர்களை சென்றடையுமா பேரன்பு?

ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

மீண்டும் ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு.

இன்று விஜயகாந்துக்கு மறக்க முடியாத கொண்டாட்டமான நாள்

விஜயகாந்த் உடல்நல சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் வாழ்த்து கூற அவர் மறந்ததில்லை

தல 59: வித்யாபாலன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே

விஜயகாந்த், மாதவன் பட நாயகிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்

விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்',  மாதவன் நடித்த 'நான் அவள் அது' மற்றும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் தற்போது 'தி டெனட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.