close
Choose your channels

ஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதனை சுத்தம் செய்ததால் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி சுமித்திரா தனது வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஷூக்கள் சேரும் சகதியுமாக இருந்ததால் அதனை சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது அதில் இருந்து திடீரென ஒரு பாம்பு எட்டிப்பார்த்து சுமித்ராவை கடித்தது. இதனை அடுத்து வலி தாங்க முடியாமல் அலறிய சுமித்ராவை உடனடியாக அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்

ஆனால் அதற்குள் சுமித்ராவின் உடல் முழுவதும் விஷம் பரவியதால் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து பழனி தனது மனைவியைத் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுமித்ரா உயிர் இழந்தார்

மழைக்காலம் என்பதால் ஷூ போன்ற பொருள்களில் பாம்புகள் உள்ளே புகுந்து கொள்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதுபோன்ற பொருட்களை சுத்தம் செய்யும் முன் அதனை கவனமாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.