close
Choose your channels

வெளியூரில் மாட்டிக்கொண்ட மகன்: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

Thursday, April 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் மகன் மாட்டிக்கொண்டதால், மரணமடைந்த தந்தைக்கு அவரது மகளே இறுதிச் சடங்கு செய்த சோகமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் வெகுதூரத்தில் இருந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி என்ற பகுதியை சேர்ந்த 60 வயது அசோக் சவுகான் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால் அவரது மகன் வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்றால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்ய வீடு திரும்ப முடியவில்லை

இந்த நிலையில் அசோக் சவுகன் இறுதிச்சடங்கை அவரது மகளே செய்ய முன்வந்தார். உறவினர்கள் கூட தெரிவிக்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து நேராக இடுகாட்டுக்கு அசோக் சவுகானின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், இடுகாட்டில் ஒரு மகன் செய்ய வேண்டிய ஈமச்சடங்கை அவரது மகள் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணங்கள், இறுதிச்சடங்குகள் உட்பட பல நிகழ்வுகள் இதுபோன்று அசாதாரணமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.