close
Choose your channels

"அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்"?! ஆர்.எஸ்.எஸ் தலைவரை சாடிய சோனம் கபூர்.

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விவாவகரத்து குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் முட்டாள் தனமாக பேசியுள்ளார்..! சோனம் கபூர்.    திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்தை, பாலிவுட் நடிகை சோனம் கபூர் ’முட்டாள்தனமானது’ எனக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது “படித்தவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்கள்” குடும்பங்களுக்கு மத்தியில்தான் என்றும் கல்வியும் வசதியும் ஆணவத்தை ஏற்படுத்துவதன் விளைவாக குடும்பங்கள் சரிந்துவிடுகின்றன என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்? முட்டாள்தனமான, பிற்போக்கான கருத்து” எனக் காட்டமாக சாடியுள்ளார் சோனம் கபூர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.