close
Choose your channels

மனைவிக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கலையே..! ஓட்டு போட சென்ற சூரிக்கு ஏற்பட்ட மனவேதனை..!

Friday, April 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர் என்றும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் நடிகர் சூரி இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்ற சென்றபோது அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் இதனை அவர் வருத்தத்துடன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூரி இன்று வாக்கை செலுத்துவதற்காக வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்றபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை நான் அனைத்து தேர்தலிலும் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன், அதேபோல் இன்றும் வாக்கு செலுத்த வந்தபோது, இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். என்னுடைய மனைவி பெயர் இருக்கிறது ஆனால் என்னுடைய பெயர் மட்டும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

எனவே நூறு சதவீத ஜனநாயக உரிமையை ஆற்ற வந்த நான் மன வேதனை அடைந்தேன். மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த தவறு எங்கே எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஓட்டுப் போடவில்லையே என்ற மனவேதனையுடன் செல்கிறேன். தயவு செய்து அனைவரும் நூறு சதவீதம் ஓட்டு போடுங்கள், நாட்டுக்கு அதுதான் நல்லது என்று சூரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.