மேலும் ஒரு அதிமுக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வருகையா?

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியாராஜன் அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வர தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

சின்னம்மா தான் முதல்வர் பதவியை ஏற்பார், ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களின் பலம் இல்லை என்று நேற்று வரை கூறி வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் "எனக்கு வாக்களித்த வாக்காளர்களின் கருத்தினை கேட்டு, அம்மாவின் வழிகாட்டுதலின்படி, அதிமுகவின் ஒற்றுமை மற்றும் கண்ணியத்தை நிலை நிறுத்தும் வகையில் முடிவு எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜனின் இந்த திடீர் மாற்றத்தால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கட்சியும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் சசிகலாவை விட்டு விலகி கொண்டிருப்பதாகவும் அதிமுக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

More News

முதல்வர் ஓபிஎஸ்-க்கு இரண்டு அதிமுக எம்பிக்கள் ஆதரவு

தமிழக அரசியல் தற்போது முயல்-ஆமை கதை போல சென்று கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் 130 எம்.எல்.ஏக்களும், 37 எம்பிக்களும் சசிகலாவுக்கு ஆதரவு என்றும், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வெறும் 3 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகமாக முயல் தூங்கியது போலவும், மெதுவாக சென்ற ஆமை வெற்றி பெற்றது போலவும் ஓபிஎஸ் அவர்களின்

சட்டப்பேரவை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கவர்ன்ரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்றுமுன்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்றுக்கொண்டது...

எந்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆளுனரின் செய்தித்தொடர்பாளர் தகவல்

நேற்று இரவு மத்திய அரசுக்கு கவர்னர் ஒரு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் சசிகலாவை ஆட்சி அமைக்க உடனே அழைப்பு விடுக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன...

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. கவர்னர் வித்யாசாகர் ராவ்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? என்ற முடிவு தற்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் கையில் இருப்பதால் அவரது முடிவை எதிர்பார்த்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது.

தயவுசெய்து என் ஓட்டை திருப்பி தாங்கடா. பிரபல நடிகை ஆவேசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இரண்டு மாதங்கள் முதல்வர் பதவியில் வீற்றிருந்த ஓபிஎஸ் அவர்களை திடீரென பதவி விலக செய்துவிட்டு சசிகலா அந்த பதவிக்கு வரத்துடிக்கும் மனப்பான்மையை கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக கண்டித்து வருகின்றனர்...