சந்தானம் படத்தில் இணைந்த சிவாஜி-எம்ஜிஆர் நாயகி: 400வது படம் என தகவல்

  • IndiaGlitz, [Monday,October 21 2019]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘உயர்ந்த மனிதன்’, ‘பார் மகளே பார்,’ 'புதிய பறவை’, ‘எங்கள் தங்க ராஜா’, ‘பாலும் பழமும்’, ‘பாவை விளக்கு’ உள்பட பல படங்களிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ‘ஒளிவிளக்கு’, ‘பணம் படைத்தவன்’ படங்களிலும் மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி.

கடந்த 1954ம் ஆண்டு ’பணம் பத்தும் செய்யும்’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து சாதனை செய்துள்ளார். இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வரும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படம் அவருக்கு 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சந்தானம், இயக்குனர் கண்ணன் உள்பட படக்குழுவினர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து செளகார் ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மசாலா பிக்ஸ் அசோசியேஷன் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கைதி' டைட்டிலில் கமலுக்கு கெளரவம் அளித்த இயக்குனர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

நான் நல்ல படம் எடுக்கும் நல்ல பாம்பு: எஸ்.ஆர்.பிரபு

தீபாவளி திரை விருந்தாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள்

லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவான பாகுபலி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்குவார் என்றும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத பணிகளை முடித்து விட்டார் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே கூறப்பட்டது 

விஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள