நான் நல்ல படம் எடுக்கும் நல்ல பாம்பு: எஸ்.ஆர்.பிரபு
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபாவளி திரை விருந்தாக விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் கடந்த சில நாட்களாக மோதி இரு படங்களின் தயாரிப்பாளர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் என்னை பொருத்தவரை அனைத்து படங்களும் நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும் ஆனால் ஒரு சிலர் தேவையில்லாத விமர்சனம் செய்து செய்வதாகவும் ’கைதி’ தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள்ட் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து ஒரு டுவிட்டர் பயனாளி ’நீங்கள் ஒரு பாம்பு என்பது அனைவரும் அறிவோம் என்றும் பணம் மட்டும் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை கொடுக்காது என்றும் நீங்கள் எப்பொழுதுமே குறைந்த அளவு ரிஸ்க் எடுத்து சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறீர்கள் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள எஸ்ஆர் பிரபு ’ஆம் நான் ஒரு நல்ல பாம்பு தான், நல்ல படம் மட்டுமே எடுப்பேன்' என்று கூறியுள்ளார். இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yes...I am a nalla paambu...nalla padam eduppen ?? ??✌??
— S.R.Prabhu (@prabhu_sr) October 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.