close
Choose your channels

கம்பி கட்டுற கதை விட்ட சௌமியா....! பணம் முதல் 3 திருமணம் வரை செய்த தில்லாலங்கடி..!

Friday, July 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் செய்துவிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளார் சௌமியா. அதுவும் மாஜி அமைச்சரின் பெயரைச் சொல்லி, பித்தலாட்டம் செய்தது அம்பலமாகியுள்ளது.

மணிமுத்தாரில் போலீசாக இருக்கும் கரூரைச் சேர்ந்த சுரேஷ், சௌமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். சௌமியாவின் உறவினரான விஜயிடம், தனக்கு முன்னாள் அமைச்சர் ஒருவரை தெரியும் எனவும், அவர் சொன்னால் உனக்கு அரசு வேலை ரெடியாகிவிடும் எனவும் கலர்கலராக பொய்களை அடுக்கியுள்ளார். இதை நம்பிய விஜய் தன் சொந்தக்காரர்களிடமும் இது குறித்து கூறி, பணம், நகைகளை வாங்கி இப்பெண்ணிடம் தந்துள்ளார். விஜய் மட்டுமே சுமார் 15 சவரன் நகை தந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மற்றவர்களிடமிருந்து 60 சவரன் நகை, 50 லட்சம் ரூபாய் வாங்கி சவுமியாவிடமும், உறவினர் சதீஷிடமும் தரப்பட்டுள்ளது. ஆனால் இப்பணத்தை அவர்கள் திருவிட்டதாக கொடுத்தவர்களுக்கு தெரியவந்துள்ளது. அவளின் கணவர் சுரேஷிடம் இதுகுறித்து கேட்டபோது, மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று பல நாட்கள் ஆனது என்று கூறியுள்ளார். இதன்பின் ராமநாதபுரம் காவல்துறையினரிடத்தில் சவுமியா, சதீஷ், சுரேஷ் மீது புகார் கொடுக்கப்பட்டது. தகவலிருந்து திருட்டுப்பெண் தலைமறைவாக, தீவிர தேடுதலுக்குப்பின் அவளை சேலத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் சௌமியா. இதுபோன்று பலரை ஏமாற்றி பணம் பறிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருந்த சௌமியா, தன்னுடைய 3-ஆவது கணவர் வீட்டில் தான் பதுங்கி இருந்துள்ளார். சிரித்து சிரித்து பேசி, இளைஞர்களை காதல் வலையில் விழச்செய்த சௌமியா, அவர்களிடம் நெருக்கமாக பழகி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின் கணவர்களின் உறவுக்காரர்களுக்கு குறிவைத்து பண மோசடியில் இறங்கியுள்ளார். இதுபோலவே பலரையும் கோடிக்கணக்கில் ஏமாற்றியுள்ளாள் இந்த "ஸ்மைல் சௌமியா".

முதல் கணவன் பெயர் சுரேஷ், 2வது கணவன் பெயர் சக்தி, 3வது கணவன் பெயர் சீனிவாசன். பலரிடம் வேலை வாங்கித்தருவதாகச்சொல்லி, கையில் பணம் வாங்காமல், 2-ஆவது கணவரின் அக்கவுண்ட்-க்கு பணம் அனுப்ப சொல்லியுள்ளார். தன்னுடைய வங்கி கணக்கை தராததால், தற்போது பலருக்கும் அவள் மீது புகார் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் பலர் வீடுகளில் திருடியுள்ளார் இந்த தில்லாலங்கடி சௌமியா. ஆனால் இத்தனை சம்பவங்களுக்கும் பின் இருப்பது முதல் கணவன் சுரேஷ் தான். உறவுக்காரர்களைப் பார்த்தால் சிரித்துப்பேச சொல்லி, மேலும் பல ஐடியாக்களை தருவது இவன்தான். தற்சமயம் காவல்துறை சுரேஷ் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முன்வந்து, கைது செய்யப்போவதாக கூறப்படுகின்றது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.