மலைகிராம பெண்ணின் போலீஸ் கனவை நிறைவேற்ற முன்வந்த எஸ்பி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,July 24 2020]

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒரு மலை கிராமம் பாலமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் இருப்பதால் சரியான சாலை வசதிகூட இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மலைக் கிராமத்தில் சுமார் 5000 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஜெயந்தி என்னும் ஒரு சிறுமி முதல் முறையாக தனது 10 ஆம் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார். இத்தகவலை கேட்டறிந்த அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஐஏஎஸ் அந்த மாணவியை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் வந்த ஜெயந்தியைப் பார்த்து நெகிழ்ந்த தீபா கனிகர், உனக்கு என்ன ஆக வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். உங்களைப் போன்று ஒரு சிறந்த அதிகாரியாக ஆகவேண்டும் என்று ஜெயந்தி கூறவே மலைத்து போயிருக்கிறார். உடனே மாணவி ஜெயந்தியின் கல்விக்கு ஆகும் ஒட்டுமொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இச்சம்பவத்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் மாணவி ஜெயந்தி. பின்பு, இந்திய குடிமைப் பணிக்கு உதவும் சில புத்தகங்களைக் கொடுத்து மாணவியையும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் தற்போது எஸ்பி தீபா கனிகருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

தமிழகத்தின் முக்கிய நகரில் நாளை முதல் முழு ஊரடங்கு: கலெக்டர் அதிரடி அறிவிப்பு 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது என்பதும் இன்று மட்டும் தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!

இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது