எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் உடல்நிலை தேறி வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் கண்விழித்து பார்ப்பதோடு ஒரு விரலை தூக்கி காண்பித்து மருத்துவர்களை அடையாளம் கண்டு கொண்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரு நாள், இரண்டு நாளில் குணமடைய வாய்ப்பு இல்லை என்றாலும் நிச்சயமாக அவர் விரைவில் குணமடைவார் என்றும் அதற்கான அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர்கள் கூறி இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நானும் எனது குடும்பத்தாரும் ரசிகர்களும் செய்யும் பிரார்த்தனையால் அவர் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை தெரிவிக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று எஸ்பிபி சரண் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்: சைலேந்திரபாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் ஐஜியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே.

சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

லோகேஷ் கனகராஜ் ஹீரோவின் மறைமுக திருமண அறிவிப்பா இது? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் தனது திருமணம் குறித்த மறைமுக அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எஸ்பிபி சார் கடவுள் மாதிரி: கண்கலங்கிய பிரபல நடிகையின் வீடியோ

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத