close
Choose your channels

எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

Sunday, August 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்ல முறையில் உடல்நிலை தேறி வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் கண்விழித்து பார்ப்பதோடு ஒரு விரலை தூக்கி காண்பித்து மருத்துவர்களை அடையாளம் கண்டு கொண்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரு நாள், இரண்டு நாளில் குணமடைய வாய்ப்பு இல்லை என்றாலும் நிச்சயமாக அவர் விரைவில் குணமடைவார் என்றும் அதற்கான அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர்கள் கூறி இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நானும் எனது குடும்பத்தாரும் ரசிகர்களும் செய்யும் பிரார்த்தனையால் அவர் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த தகவலை தெரிவிக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று எஸ்பிபி சரண் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.