எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் போலீசார் குவிப்பு: என்ன ஆச்சு?

பாடகர் எஸ்பிபி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் அந்த மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் பாடகர் எஸ்பிபி சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை எஸ்பி சைலஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வந்திருப்பதும், மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கூடுதல் காவல் ஆணையர் அருண் அவர்கள் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மருத்துவமனை முன் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

எஸ்.பி.பியை காப்பாற்றுவது கடினம்: மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

எக்ஸாம் எழுதி மெயில் அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டாங்க: அஜித் பட நடிகையின் புலம்பல்

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவருமான அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் சென்னைப் பல்கலைக்கழகம் மீது புகார் கூறியுள்ளார்.  

எஸ்பிபி-ஐ பார்க்க மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

பாடகர் எஸ்பிபி மிகவும் கவலைக்கிடம்: இசை ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்