தமிழக மக்களுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்ரீரெட்டி

  • IndiaGlitz, [Wednesday,April 18 2018]

கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் உள்ள முக்கிய புள்ளிகள் நடிகைகளை படுக்கை அழைத்த விவகாரம் குறித்து அவர் பிரபலங்களின் பெயர்களை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்து வருகிறார். அவருடைய இந்த பட்டியலில் இன்னும் யாரெல்லாம் சிக்க போகின்றார்கள் என்பதே தற்போதைய தெலுங்கு திரையுலகின் கவலையாக உள்ளது

இந்த நிலையில் தமிழக மக்களுக்கு ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தமிழக மக்கள் குறித்து அவர் கூறியபோது,ம் 'தமிழக மக்கள் தங்கள் தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தமிழில் அவர்கள் மோசமான கமெண்டுக்கள் பதிவு செய்வது இல்லை. மேலும் ஒவ்வொருவரும் பள்ளியில் தமிழை முதல்மொழியாக பயிலுவதை ஒரு கடமையாக கொண்டுள்ளனர். பொதுமேடைகளிலும் அவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றனர்.

தெலுங்கு மக்கள் தமிழ் மக்களை பார்த்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. தமிழ் மக்களுக்கும் சென்னைக்கும் ஒரு ஹேட்ஸ் ஆஃப் என்று கூறியுள்ளார்.
 

More News

தமிழகத்தில் மெர்க்குரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வசனமே இல்லாத ஊமைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மொழி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னத்தில் தட்டிய பெண் நிருபருக்கு கவர்னர் அனுப்பிய கடிதம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அந்த சந்திப்பு முடிந்ததும் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டி, நீங்கள் என் பேத்தி போல் இருப்பதாக கூறினார். 

தளபதியின்மெர்சலுக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்

'மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர் உலக சாதனை செய்தது மட்டுமின்றி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படமாகவும் அமைந்தது.

கணவருக்கு பெண்களை சப்ளை செய்தாரா பிரபல நடிகை: சமூக ஆர்வலரின் திடுக்கிடும் குற்றச்சாட்டு

நடிகை ஜீவிதா தனது கணவர் டாகர் ராஜசேகருக்கு இளம்பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா என்பவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தின்போது தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யாவின் மனைவி யார்? ஏமாற்றிய எங்க வீட்டு மாப்பிள்ளை

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்ற கேள்விக்கு நேற்றைய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் தெரிய வரும் என்று கூறப்பட்டது.