close
Choose your channels

தமிழக மக்களுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்ரீரெட்டி

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் உள்ள முக்கிய புள்ளிகள் நடிகைகளை படுக்கை அழைத்த விவகாரம் குறித்து அவர் பிரபலங்களின் பெயர்களை துணிச்சலுடன் வெளிக்கொணர்ந்து வருகிறார். அவருடைய இந்த பட்டியலில் இன்னும் யாரெல்லாம் சிக்க போகின்றார்கள் என்பதே தற்போதைய தெலுங்கு திரையுலகின் கவலையாக உள்ளது

இந்த நிலையில் தமிழக மக்களுக்கு ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தமிழக மக்கள் குறித்து அவர் கூறியபோது,ம் 'தமிழக மக்கள் தங்கள் தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தமிழில் அவர்கள் மோசமான கமெண்டுக்கள் பதிவு செய்வது இல்லை. மேலும் ஒவ்வொருவரும் பள்ளியில் தமிழை முதல்மொழியாக பயிலுவதை ஒரு கடமையாக கொண்டுள்ளனர். பொதுமேடைகளிலும் அவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகின்றனர்.

தெலுங்கு மக்கள் தமிழ் மக்களை பார்த்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. தமிழ் மக்களுக்கும் சென்னைக்கும் ஒரு ஹேட்ஸ் ஆஃப் என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.