விஷாலுக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

கோலிவுட், டோலிவுட் திரையுலக பிரபலங்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. விளம்பரத்திற்காக அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியாக கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இன்னும் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டுக்கள் விழப்போகின்றதோ தெரியவில்லை

இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி நன்றி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஷால், 'நடிகை ஸ்ரீரெட்டிக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி ஜாக்கிரதையாக இருப்பார்கள். தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்து விடுவார்கள்;' என்று கூறினார்.

செய்தித்தாளில் வெளியான இந்த பேட்டியை அப்படியே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஸ்ரீரெட்டி, விஷாலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

More News

696 நாட்களுக்கு பின் மீண்டும் கேப்டனாகிய தல தோனி

கிரிக்கெட் ரசிகர்களின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் கேப்டன் ஆகியுள்ளார்

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டுமா? அமைச்சர் ஜெயகுமார்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார்.

பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் ரீமேக்கில் சீயான் விக்ரம்?

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சாமி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது