close
Choose your channels

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர். வசூல் செய்த மிகப்பெரிய சாதனை!

Monday, March 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் செய்த வசூல் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ’ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் பிரமாதமான புரமோஷன் பணிகள் காரணமாக இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் 257 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்று நாட்களில் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹிந்தியில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.550 கோடி என்ற நிலையில் 3 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் இந்த படம் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதால் இந்த படத்தின் லாபம் யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.