தோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சென்னை சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் உருவப்படத்தை கோலமாவு கொண்டு புதுச்சேரியை சேர்ந்த ஓவியக் கல்லூரி மாணவி ஒருவர், ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியம் சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் சென்னை சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சிஎஸ்கே கேப்டன் தோனியை பாராட்டும் விதமாக அவரது ஓவியத்தை 12 அடி உயரம் 12 அடி அகலத்திற்கு கோலமாவுக் கொண்டு மாணவி அறிவழகி வரைந்துள்ளார். இவர் புதுச்சேரி ஓவியக் கல்லூரியில் பயின்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
7 கிலோ கோலமாவைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியத்தை வரைவதற்கு அறிவழகி 2 நாட்களாகத் தொடர்ந்து வரைந்துள்ளது. மஞ்சள் வண்ணத்தில் கண்ணை கவரும் வகையில் தல தோனியின் ஓவியத்தை வரைந்த மாணவி அறிவழகியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த ஓவியம் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரைப் போலவே கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தோனியின் ரசிகர் ஒருவர் அவருடைய வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றியுள்ளார். வீட்டின் முகப்பில் தோனியின் ஓவியத்தையும் வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments