close
Choose your channels

மகளை படிப்பில் முந்திய மாணவன்: ஆத்திரத்தில் கொலை செய்த தாய்!

Sunday, September 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகளைவிட நன்றாக படித்தால் மாணவனை விஷம் கொடுத்து கொலை செய்த மாணவியின் தாய் ஒருவரால் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பால மணிகண்டன் என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பால மணிகண்டன் படிக்கும் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் படிப்பில் போட்டி இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தனது மகள் முதல் மாணவியாக வர வேண்டும் என்பதற்காக பால மணிகண்டனை கொலை செய்ய மாணவியின் பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் ஈடுபட்டுவந்த பால மணிகண்டனுக்கு மாணவியின் தாய் குளிர்பானம் கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்த மணிகண்டனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவர் பால மணிகண்டனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி ஆய்வு செய்தபோது பால மணிகண்டனுக்கு மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் மாணவியின் தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

படிப்பு போட்டியில் தனது மகளின் சக மாணவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்த பெண் ஒருவரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.