நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மரணம்

  • IndiaGlitz, [Monday,May 06 2019]

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் என்ற பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மாற்றுத்திறனாளி மகள் சந்தியா நேற்று நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். அந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுதி முடித்துவிட்டு, மீண்டும் சந்தியா பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென பேருந்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே பேருந்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சந்தியா ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தது அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More News

கஞ்சா விருந்தில் கலந்து கொள்ள ஆன்லைனில் முன்பதிவு: 7 பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது!

ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பிணி நடிகைக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தெறி', 'தங்கமகன்', 2.0' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன்

ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த பெருமைக்குரிய விருது!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, தமிழ் திரையுலகில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இனி கார்ஃபைடு கல் வேண்டாம்! பழங்கள் பழுக்கவைக்க வந்தது புது டெக்னிக்! வியாபாரிகள் மகிழ்ச்சி!

பழ சந்தைகளில் உடனடியாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்ஃபைட் கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு அதிக அளவு தீங்கு உள்ளது என்பதை அறிந்தும்

10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்! பணத்திற்காக அரங்கேறிய அவலம்!

பணத்திற்கு ஆசைப்பட்டு, 10 வயது மகளை 40 வயதாகும் நபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த, கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்...