ஆபாச கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சினிமாவில் பிசியாக்கிவிட்டது. ஓவியா முதல் ஜூலி வரை அனைவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜாவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நேற்று சுஜா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த உடை குறித்து ஒருசில நெட்டிசன்கள் ஆபாசமான கமெண்ட்டுக்களை பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு சுஜா தனது சமூக வலைத்தளத்தில் சாட்டையடி பதிலை கொடுத்துள்ளார்.

நான் ஒரு நடிகை தான். என்னுடைய சாப்பாட்டை நான் உழைத்து பெருமையாக சாப்பிடுகிறேன். சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் என் உடை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது நான் தான். அது என் விருப்பம். என் உடை உங்களுக்கு என்ன பிரச்சனை தருகிறது. என் உடைதான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமா?

நடிகைகளும், அவர்களது உடைகளும் பிரச்சனை இல்லை. பிரச்சனை உங்களிடம் தான் இருக்கின்றது. இண்டர்நெட் என்னும் மிகப்பெரிய உலகில் நீங்கள் ஆபாச கமெண்ட் அடித்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். நிச்சயம் நீங்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சுஜாவருணி தெரிவித்துள்ளார்.

More News

விஜய்சேதுபதி நாயகிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய்சேதுபதி நடிப்பில் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் நாயகி கீதா கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. விரைவில் இவரது திருமணம் நடைபெறவுள்ளது.

குழந்தைகள் தினம் மாற்றப்படுமா? பாஜக எம்பிக்களின் கையெழுத்து வேட்டையால் பரபரப்பு

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில், பாஜக எம்பிக்கள் 59 பேர் டிசம்பர் 26ஆம் தேதியை குழந்தைகள் தினமாக மாற்ற வேண்டும்

ஜாமீன் எப்போது? 2வது இரவையும் ஜெயிலில் கழிக்கும் சல்மான்கான்

அரிய வகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

காஷ்மீரை அடுத்து ஐபிஎல் குறித்து அஃப்ரிடியின் சர்ச்சை கருத்து

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அஃப்ரிடி தெரிவித்தார். அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய வீரர்களான கபில்தேவ், சச்சின், கவுதம் காம்பீர் , ரெய்னா உள்பட பலர் பதிலடி கொடுத்தனர்.

ஜெய்-அஞ்சலி காதல் மீண்டும் தொடர்கிறதா?

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி காதலித்து வருவதாக கோலிவுட்டில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்வதை போல ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் பரஸ்பரம் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அன்பை பகிர்ந்து கொண்டனர்.